597மட்டு இலங்கு கொன்றை அம்தார்-மாலை சூடி,
         மடவாள் அவளோடு, மான் ஒன்று ஏந்தி,
சிட்டு இலங்கு வேடத்தார் ஆகி, நாளும் சில்பலிக்கு
               என்று ஊர் ஊரின் திரிதர்வாரும்;
கட்டு இலங்கு பாசத்தால் வீச வந்த காலன்
                  தன் காலம் அறுப்பார் தாமும்;
விட்டு இலங்கு வெண்குழை சேர் காதினாரும்
     வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே.