880 | தொண்டர்கள் தம் தகவின் உள்ளார் போலும்; தூநெறிக்கும் தூ நெறி ஆய் நின்றார் போலும்; பண்டு இருவர் காணாப் படியார் போலும்; பத்தர்கள் தம் சித்தத்து இருந்தார் போலும்; கண்டம் இறையே கறுத்தார் போலும்; காமனையும் காலனையும் காய்ந்தார் போலும்; இண்டைச் சடை சேர் முடியார் போலும் இன்னம்பர்த் தான் தோன்றி ஈசனாரே. |