150பூத் தான் ஆம்; பூவின் நிறத்தானும்(ம்) ஆம்;
            பூக்குளால் வாசம் ஆய் மன்னி நின்ற
கோத் தான் ஆம்; கோல் வளையாள் கூறன்
       ஆகும்; கொண்ட சமயத்தார் தேவன் ஆகி,
ஏத்தாதார்க்கு என்றும் இடரே துன்பம் ஈவான்
              ஆம்; என் நெஞ்சத்துள்ளே நின்று
காத்தான் ஆம், காலன் அடையா வண்ணம்;
             கண் ஆம்-கருகாவூர் எந்தைதானே.