784 | மாலைப் பிறை சென்னி வைத்தார் தாமே; வண் கயிலை மா மலையை வந்தியாத, நீலக் கடல் சூழ், இலங்கைக் கோனை நெரிய விரலால் அடர்த்தார் தாமே; பால் ஒத்த மேனி நிறத்தார் தாமே; பழனை பதியா உடையார் தாமே; சீலத்தார் ஏத்தும் திறத்தார் தாமே திரு ஆலங்காடு உறையும் செல்வர் தாமே. |