372 | “அம் சுண்ண வண்ணனே!” என்றேன், நானே; “அடியார்கட்கு ஆர் அமுதே!” என்றேன், நானே; “நஞ்சு அணி கண்டனே!” என்றேன், நானே; “நாவலர்கள் நால்மறையே!” என்றேன், நானே; “நெஞ்சு உணர உள் புக்கு இருந்தபோது நிறையும் அமுதமே!” என்றேன், நானே; “அஞ்சாதே ஆள்வானே! ஐயாற(ன்)னே!” என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே!. |