109 | இல்லானை, -எவ் இடத்தும், -உள்ளான் தன்னை; இனிய நினையாதார்க்கு இன்னா தானை; வல்லானை, வல் அடைந்தார்க்கு அருளும் வண்ணம்; மாட்டாதார்க்கு எத்திறத்தும் மாட்டாதானை; செல்லாத செந்நெறிக்கே செல்விப்பானை; திருப் புன்கூர் மேவிய சிவலோக(ன்)னை; நெல்லால் விளை கழனி நீடூரானை;-நீதனேன் என்னே நான் நினையா ஆறே!. |