Try error :java.sql.SQLException: Closed Resultset: next
604நல்-தவனை, புற்று அரவம் நாணினானை, நாணாது
              நகுதலை ஊண் நயந்தான் தன்னை,
முற்றவனை, மூவாத மேனியானை, முந்நீரின்
              நஞ்சம் உகந்து உண்டான் தன்னை,
பற்றவனை, பற்றார்தம் பதிகள் செற்ற படையானை,
                அடைவார் தம் பாவம் போக்கக்
கற்றவனை, கற்குடியில் விழுமியானை, கற்பகத்தை,
                 கண் ஆரக் கண்டேன், நானே.