819 | கடு வெளியோடு ஓர் ஐந்தும் ஆனார் போலும்; காரோணத்து என்றும் இருப்பார் போலும்; இடி குரல் வாய்ப் பூதப்படையார் போலும்; ஏகம்பம் மேவி இருந்தார் போலும்; படி ஒருவர் இல்லாப் படியார் போலும்; பாண்டிக்கொடு முடியும் தம் ஊர் போலும்; செடி படு நோய் அடியாரைத் தீர்ப்பார் போலும் திருச் சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர் தாமே. |