954 | பண் ஆர்ந்த வீணை பயின்றது உண்டோ? பாரிடங்கள் பல சூழப் போந்தது உண்டோ? உண்ணா அரு நஞ்சம் உண்டது உண்டோ? ஊழித்தீ அன்ன ஒளிதான் உண்டோ? கண் ஆர் கழல் காலற் செற்றது உண்டோ? காமனையும் கண் அழலால் காய்ந்தது உண்டோ? எண்ணார் திரிபுரங்கள் எய்தது உண்டோ? எவ் வகை, எம்பிரானாரைக் கண்ட ஆறே?. |