298 | பை ஆடு அரவம் கை ஏந்தினானை, பரிதி போல்-திருமேனிப் பால்நீற்றானை, நெய் ஆடு திருமேனி நிமலன்தன்னை, நெற்றிமேல் மற்றொரு கண் நிறைவித்தானை, செய்யானை, செழும் பவளத்திரள் ஒப்பானை, செஞ்சடைமேல் வெண்திங்கள் சேர்த்தினானை, ஐயாறு மேயானை, ஆரூரானை,-அறியாது அடிநாயேன் அயர்த்த ஆறே!. |