588 | “பல்லார் பயில் பழனப் பாசூர்” என்று, பழனம் பதி பழைமை சொல்லி நின்றார்; “நல்லார் நனி பள்ளி இன்று வைகி, நாளைப் போய், நள்ளாறு சேர்தும்” என்றார்; சொல்லார், ஒரு இடமா; தோள் கை வீசி, சுந்தரராய், வெந்த நீறு ஆடி, எங்கும் மல் ஆர் வயல் புடை சூழ் மாட வீதி வலம்புரமே புக்கு, அங்கே மன்னினாரே. |