| 636 | ஆதியனை, எறி மணியின் ஓசையானை,      அண்டத்தார்க்கு அறிவு ஒண்ணாது அப்பால் மிக்க   சோதியனை, தூ மறையின் பொருளான் தன்னை,     சுரும்பு அமரும் மலர்க்கொன்றை தொல்-நூல் பூண்ட   வேதியனை, அறம் உரைத்த பட்டன் தன்னை,         விளங்கு மலர் அயன் சிரங்கள் ஐந்தில் ஒன்றைச்   சேதியனை, திரு ஆனைக்கா உளானை,                 செழுநீர்த்திரளை, சென்று ஆடினேனே. |