Try error :java.sql.SQLException: Closed Resultset: next
284காமனையும் கரி ஆகக் காய்ந்தார்போலும்;
      கடல் நஞ்சம் உண்டு இருண்ட கண்டர்போலும்;
சோமனையும் செஞ்சடைமேல் வைத்தார்போலும்;
   சொல் ஆகிச் சொல்பொருள் ஆய் நின்றார்போலும்;
நா மனையும் வேதத்தார் தாமேபோலும்;
             நங்கை ஓர்பால் மகிழ்ந்த நம்பர்போலும்;
ஆ(ம்)மனையும் திருமுடியார் தாமேபோலும்-
               அணி ஆரூர்த் திரு மூலட்டானனாரே.