Try error :java.sql.SQLException: Closed Resultset: next
858பொல்லாத என் அழுக்கில் புகுவான், என்னைப் புறம் புறமே
                            சோதித்த புனிதன் தன்னை;
எல்லாரும் தன்னையே இகழ, அந் நாள், “இடு, பலி!” என்று
                            அகம் திரியும் எம்பிரானை;
சொல்லாதார் அவர் தம்மைச் சொல்லாதானை; தொடர்ந்து
                     தன் பொன் அடியே பேணுவாரைச்
செல்லாத நெறி செலுத்த வல்லான் தன்னை; திரு
                   ஆலம்பொழிலானை, சிந்தி, நெஞ்சே!.