725 | கலைக் கன்று தங்கு கரத்தான் கண்டாய்; கலை பயில்வோர் ஞானக்கண் ஆனான் கண்டாய்; அலைக் கங்கை செஞ்சடை மேல் ஏற்றான கண்டாய்; அண்ட கபாலத்து அப்பாலான் கண்டாய்; மலைப் பண்டம் கொண்டு வரும் நீர்ப் பொன்னி வலஞ்சுழியில் மேவிய மைந்தன் கண்டாய் குலைத் தெங்கு அம்சோலை சூழ் கொட்டையூரில் கோடிச்சுரத்து உறையும் கோமான் தானே. |