Try error :java.sql.SQLException: Closed Resultset: next
343ஓங்கி-உயர்ந்து எழுந்து நின்ற நாளோ? ஓர்
      உகம் போல் ஏழ் உகம் ஆய் நின்ற நாளோ?
தாங்கிய சீர்த் தலை ஆன வானோர் செய்த
      தக்கன் தன் பெரு வேள்வி தகர்த்த நாளோ?
நீங்கிய நீர்த் தாமரையான் நெடு மாலோடு,
   “நில்லாய், எம்பெருமானே!” என்று அங்கு ஏத்தி,
வாங்கி, மதி, வைப்பதற்கு முன்னோ? பின்னோ?
         வளர் ஆரூர் கோயிலாக் கொண்ட நாளே.