481ஏயவன் காண்; எல்லார்க்கும் இயல்பு ஆனான் காண்; இன்பன்
            காண்; துன்பங்கள் இல்லாதான் காண்;
தாய் அவன் காண், உலகுக்கு ஓர்; தன் ஒப்பு இல்லாத் தத்துவன்
           காண்; உத்தமன் காண்; தானே எங்கும்
ஆயவன் காண்; அண்டத்துக்கு அப்பாலான் காண்; அகம்
           குழைந்து, மெய் அரும்பி, அழுவார் தங்கள்
வாயவன் காண் வானவர்கள் வணங்கி ஏத்தும் வலி வலத்தான்
            காண்; அவன் என் மனத்து உளானே.