528 | சந்திரனைத் திருவடியால்-தளர்வித்தான் காண்; தக்கனையும முனிந்து எச்சன் தலை கொண்டான் காண்; இந்திரனைத் தோள் முறிவித்து அருள் செய்தான் காண்; ஈசன் காண்; நேசன் காண், நினைவோர்க்கு எல்லாம், மந்திரமும் மறைப்பொருளும் ஆயினான் காண்; மாலொடு அயன் மேலொடு கீழ் அறியா வண்ணம் வெந்தழலின் விரி சுடர் ஆய் ஓங்கினான் காண் விண் இழி தண் வீழிமிழலையானே. |