732தளம் கிளரும் தாமரை ஆதனத்தான் கண்டாய்;
      தசரதன் தன் மகன் அசைவு தவிர்த்தான் கண்டாய்;
இளம்பிறையும் முதிர் சடை மேல் வைத்தான் கண்டாய்;
        எட்டு-எட்டு இருங் கலையும் ஆனான் கண்டாய்;
வளம் கிளர் நீர்ப்பொன்னி வலஞ்சுழியான் கண்டாய்;
    மா முனிகள் தொழுது எழு பொன் கழலான் கண்டாய்
குளம் குளிர் செங்குவளை கிளர் கொட்டையூரில்
               கோடீச்சுரத்து உறையும் கோமான் தானே.