875மலையானை; வரும் மலை அன்று உரிசெய்தானை; மறையானை;
                            மறையாலும் அறிய ஒண்ணாக்
கலையானை; கலை ஆரும் கையினானை; கடிவானை,
                            அடியார்கள் துயரம் எல்லாம்;
உலையாத அந்தணர்கள் வாழும் ஓமாம்புலியூர் எம் உத்தமனை;
                                      புரம் மூன்று எய்த
சிலையானை; வடதளி எம் செல்வன் தன்னை; சேராதே திகைத்து
                                    நாள் செலுத்தினேனே!.