Try error :java.sql.SQLException: Closed Resultset: next
919தந்தை யார்? தாய் யார்? உடன் பிறந்தார், தாரம், ஆர்?
                   புத்திரர் ஆர்? தாம் தாம் ஆரே?
வந்த ஆறு எங்ஙனே? போம் ஆறு ஏதோ? மாயம்
               ஆம்; இதற்கு ஏதும் மகிழ வேண்டா!
சிந்தையீர்! உமக்கு ஒன்று சொல்லக் கேண்மின்: திகழ்
          மதியும் வாள் அரவும் திளைக்கும் சென்னி
எந்தையார் திருநாமம் “நமச்சிவாய” என்று எழுவார்க்கு
                   இரு விசும்பில் இருக்கல் ஆமே.