245 | கொங்கு வார் மலர்க்கண்ணிக் குற்றாலன்காண்; கொடுமழுவன்காண்; கொல்லைவெள் ஏற்றான்காண்; எங்கள்பால்-துயர் கெடுக்கும் எம்பிரான்காண்; ஏழ்கடலும் ஏழ்மலையும் ஆயினான்காண்; பொங்கு மா கருங்கடல் நஞ்சு உண்டான் தான்காண்; பொன் தூண் காண்; செம்பவளத்திரள் போல்வான்காண்; செங்கண் வாள் அரா, மதியோடு உடன் வைத்தான்காண்-திரு ஆரூரான்காண், என் சிந்தையானே. |