| 301 | அக்கு உலாம் அரையினன்காண்; அடியார்க்கு என்றும்           ஆர் அமுது ஆய் அண்ணிக்கும் ஐயாற்றான்காண்;   கொக்கு, உலாம் பீலியொடு, கொன்றை மாலை,                 குளிர்மதியும், கூர் அரவும், நீரும், சென்னித்   தொக்கு உலாம் சடையினன்காண்; தொண்டர் செல்லும்               தூநெறிகாண்-வானவர்கள் துதி செய்து ஏத்தும்,   திக்கு எலாம் நிறைந்த புகழ்த் திரு ஆரூரில்-திரு                       மூலட்டானத்து எம் செல்வன் தானே. |