582 | சிலை நவின்று ஒரு கணையால் புரம் மூன்று எய்த தீவண்ணர்; சிறந்து இமையோர் இறைஞ்சி ஏத்த, கொலை நவின்ற களியானை உரிவை போர்த்து, கூத்து ஆடி, திரிதரும் அக் கூத்தர்; நல்ல கலை நவின்ற மறையவர்கள் காணக்காண, கடு விடை மேல், பாரிடங்கள் சூழ, காதல் மலை மகளும் கங்கையும் தாமும் எல்லாம் வலம்புரமே புக்கு, அங்கே மன்னினாரே. |