6.91 திருஎறும்பியூர்
திருத்தாண்டகம்
898பன்னிய செந்தமிழ் அறியேன்; கவியேல் மாட்டேன்;
                எண்ணோடு பண் நிறைந்த கலைகள் ஆய-
தன்னையும் தன் திறத்து அறியாப் பொறி இலேனைத்
                  தன் திறமும் அறிவித்து, நெறியும் காட்டி,
அன்னையையும் அத்தனையும் போல, அன்பு ஆய்
     அடைந்தேனைத் தொடர்ந்து, என்னை ஆளாக் கொண்ட
தென் எறும்பியூர் மலைமேல் மாணிக்கத்தை,
        செழுஞ்சுடரை, சென்று அடையப் பெற்றேன், நானே.