47சாம்பர் அகலத்து அணிந்தாய், போற்றி! தவநெறிகள்
                        சாதித்து நின்றாய், போற்றி!
கூம்பித் தொழுவார் தம் குற்றேவ(ல்)லைக்
            குறிக்கொண்டு இருக்கும் குழகா, போற்றி!
பாம்பும் மதியும் புனலும் தம்மில் பகை தீர்த்து
                    உடன் வைத்த பண்பா, போற்றி!
ஆம்பல்மலர் கொண்டு அணிந்தாய், போற்றி!-அலை
             கெடில வீரட்டத்து ஆள்வாய், போற்றி!.