132 | நஞ்சு அடைந்த கண்டத்தர், வெண் நீறு ஆடி, நல்ல புலி அதள்மேல் நாகம் கட்டி, பஞ்சு அடைந்த மெல்விரலாள் பாகம் ஆக, “பராய்த்துறையேன்” என்று ஓர் பவள வண்ணர் துஞ்சு இடையே வந்து, துடியும் கொட்ட, துண்ணென்று எழுந்திருந்தேன்; சொல்லமாட்டேன்; புன்சடையின்மேல் ஓர் புனலும் சூடி, “புறம்பயம் நம் ஊர்” என்று போயினாரே! |