478 | துறந்தார் தம் தூ நெறிக்கண் சென்றேன் அல்லேன்; துணைமாலை சூட்ட நான் தூயேன் அல்லேன்; பிறந்தேன் நின் திரு அருளே பேசின் அல்லால் பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே; செறிந்து ஆர் மதில் இலங்கைக் கோமான்தன்னைச் செறு வரைக்கீழ் அடர்த்து, அருளிச் செய்கை எல்லாம் அறிந்தேன்; அடியேனை, “அஞ்சேல்!” என்னாய் ஆவடுதண்துறை உறையும் அமரர் ஏறே!. |