850உரிந்த உடையார் துவரால் உடம்பை மூடி
       உழிதரும் அவ் ஊமர் அவர் உணரா வண்ணம்
பரிந்தவன் காண் பனிவரை மீப் பண்டம் எல்லாம்
    பறித்து, உடனே நிரந்து வரு பாய் நீர்ப்பெண்ணை,
நிரந்து வரும் இருகரையும் தடவா ஓடி,
           நின்மலனை வலம் கொண்டு, நீள நோக்கி,
திரிந்து உலவு திரு முண்டீச்சுரத்து மேய
        சிவலோகன் காண்; அவன் என் சிந்தையானே.