897 | மடல் ஆழித் தாமரை ஆயிரத்தில் ஒன்று மலர்க்கண் இடந்து இடுதலுமே, மலி வான் கோலச் சுடர் ஆழி நெடுமாலுக்கு அருள் செய்தானை; தும்பி உரி போர்த்தானை; தோழன் விட்ட அடல் ஆழித் தேர் உடைய இலங்கைக் கோனை அரு வரைக்கீழ் அடர்த்தானை; அருள் ஆர் கருணைக்- கடலானை; கஞ்சனூர் ஆண்ட கோவை; கற்பகத்தை; கண் ஆரக் கண்டு உய்ந்தேனே!. |