6.57 திருக்கயிலாயம் போற்றித் திருத்தாண்டகம் |
572 | பாட்டு ஆன நல்ல தொடையாய், போற்றி! பரிசை அறியாமை நின்றாய், போற்றி! சூட்டு ஆன திங்கள் முடியாய், போற்றி! தூ மாலை மத்தம் அணிந்தாய், போற்றி! ஆட்டு ஆனது அஞ்சும் அமர்ந்தாய், போற்றி! அடங்கார் புரம் எரிய நக்காய், போற்றி! காட்டு ஆனை மெய்த்தோல் உரித்தாய், போற்றி! கயிலை மலையானே, போற்றி போற்றி!. |
|
உரை
|