226 | புலம் கொள் பூந் தேறல் வாய்ப் புகலிக் கோனை; பூம்புகார்க் கற்பகத்தை; புன்கூர் மேய, அலங்கல் அம் கழனி சூழ் அணி நீர்க் கங்கை அவிர் சடைமேல் ஆதரித்த, அம்மான் தன்னை; இலங்கு தலைமாலை பாம்பு கொண்டே, ஏகாசம் இட்டு இயங்கும் ஈசன் தன்னை;- கலங்கல் கடல் புடை சூழ் அம் தண் நாகைக்காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே. |