544இருள் ஆய உள்ளத்தின் இருளை நீக்கி, இடர்பாவம் கெடுத்து,
                                   ஏழையேனை உய்யத்
தெருளாத சிந்தைதனைத் தெருட்டி, தன் போல் சிவலோக
                              நெறி அறியச் சிந்தை தந்த
அருளானை; ஆதி மா தவத்து உளானை; ஆறு அங்கம் நால்
                               வேதத்து அப்பால் நின்ற
பொருளானை; புள்ளிருக்கு வேளூரானை; போற்றாதே ஆற்ற
                                 நாள் போக்கினேனே!.