390ஆரும் அறியா இடத்தாய், நீயே; ஆகாயம் தேர்
                            ஊர வல்லாய், நீயே;
பேரும் பெரிய இலங்கை வேந்தன் பெரிய முடிபத்து
                              இறுத்தாய், நீயே;
ஊரும் புரம் மூன்றும் அட்டாய், நீயே; ஒண்
                    தாமரையானும் மாலும் கூடித்
தேரும் அடி என்மேல் வைத்தாய், நீயே திரு
               ஐயாறு அகலாத செம்பொன்சோதீ!.