379“வில் ஆடி வேடனே!” என்றேன், நானே; “வெண்நீறு
               மெய்க்கு அணிந்தாய்!” என்றேன், நானே;
“சொல் ஆய சூழலாய்!” என்றேன், நானே; “சுலா
               ஆய தொன்னெறியே!” என்றேன், நானே;
“எல்லாம் ஆய் என் உயிரே!” என்றேன், நானே;
   “இலங்கையர்கோன் தோள் இறுத்தாய்!” என்றேன், நானே;
“அல்லா வினை தீர்க்கும் ஐயாற(ன்)னே!” என்றுஎன்றே
                         நான் அரற்றி நைகின்றேனே!.