892 | உருத்திரனை, உமாபதியை, உலகு ஆனானை, உத்தமனை, நித்திலத்தை, ஒருவன் தன்னை, பருப்பதத்தை, பஞ்சவடி மார்பினானை, பகல் இரவு ஆய் நீர் வெளி ஆய்ப் பரந்து நின்ற நெருப்பு அதனை, நித்திலத்தின் தொத்து ஒப்பானை, நீறு அணிந்த மேனியராய் நினைவார் சிந்தைக் கருத்தவனை, கஞ்சனூர் ஆண்ட கோவை, கற்பகத்தை, கண் ஆரக் கண்டு உய்ந்தேனே!. |