304 | பிறப்போடு இறப்பு என்றும் இல்லாதான்காண்; பெண் உருவோடு ஆண் உருவம் ஆயினான்காண்; மறப்படும் என் சிந்தை மருள் நீக்கினான்காண்; வானவரும் அறியாத நெறி தந்தான் காண்- நறப் படு பூ மலர், தூபம், தீபம், நல்ல நறுஞ்சாந்தம், கொண்டு ஏத்தி நாளும் வானோர் சிறப்போடு பூசிக்கும் திரு ஆரூரில்-திரு மூலட்டானத்து எம் செல்வன்தானே. |