304பிறப்போடு இறப்பு என்றும் இல்லாதான்காண்;
    பெண் உருவோடு ஆண் உருவம் ஆயினான்காண்;
மறப்படும் என் சிந்தை மருள் நீக்கினான்காண்;
          வானவரும் அறியாத நெறி தந்தான் காண்-
நறப் படு பூ மலர், தூபம், தீபம், நல்ல
      நறுஞ்சாந்தம், கொண்டு ஏத்தி நாளும் வானோர்
சிறப்போடு பூசிக்கும் திரு ஆரூரில்-திரு
                மூலட்டானத்து எம் செல்வன்தானே.