6.46 திருஆவடுதுறை திருத்தாண்டகம் |
458 | நம்பனை, நால்வேதம் கரை கண்டானை, ஞானப்பெருங்கடலை, நன்மை தன்னை, கம்பனை, கல்லால் இருந்தான் தன்னை, கற்பகம் ஆய் அடியார்கட்கு அருள் செய்வானை, செம்பொன்னை, பவளத்தை, திரளும் முத்தை, திங்களை, ஞாயிற்றை, தீயை, நீரை, அம்பொன்னை, ஆவடுதண் துறையுள் மேய அரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே!. |
|
உரை
|