531 | சமரம் மிகு சலந்தரன் போர் வேண்டினானைச் சக்கரத்தால் பிளப்பித்த சதுரர் போலும்; நமனை ஒரு கால் குறைத்த நாதர் போலும்; நாரணனை இடப்பாகத்து அடைத்தார் போலும்; குமரனையும் மகன் ஆக உடையார் போலும்; குளிர் வீழிமிழலை அமர் குழகர் போலும்; அமரர்கள் பின் அமுது உண, நஞ்சு உண்டார் போலும் அடியேனை ஆள் உடைய அடிகள் தாமே. |