86 | உண்ணா அருநஞ்சம் உண்டான் தான் காண்;ஊழித்தீ அன்னான் காண்;உகப்பார் காணப் பண் ஆரப் பல் இலயம் பாடினான் காண்;பயின்ற நால் வேதத்தின் பண்பினான் காண்; அண்ணாமலையான் காண்;அடியார் ஈட்டம் அடி இணைகள் தொழுது ஏத்த அருளுவான் காண்; கண் ஆரக் காண்பார்க்கு ஓர் காட்சியான் காண் - காளத்தியான் அவன், என் கண் உளானே. |