6.98 பொது
மறுமாற்றத் திருத்தாண்டகம்
962நாம் ஆர்க்கும் குடி அல்லோம்; நமனை அஞ்சோம்;
        நரகத்தில் இடர்ப்படோம்; நடலை இல்லோம்;
ஏமாப்போம்; பிணி அறியோம்; பணிவோம் அல்லோம்;
             இன்பமே, எந்நாளும், துன்பம் இல்லை;
தாம் ஆர்க்கும் குடி அல்லாத் தன்மை ஆன சங்கரன்,
                 நல் சங்க வெண்குழை ஓர் காதின்
கோமாற்கே, நாம் என்றும் மீளா ஆள் ஆய்க்
      கொய்ம்மலர்ச் சேவடி இணையே குறுகினோமே.