387ஆவினில் ஐந்தும் அமர்ந்தாய், நீயே; அளவு இல்
                       பெருமை உடையாய், நீயே;
பூவினில் நாற்றம் ஆய் நின்றாய், நீயே; போர்க்
           கோலம் கொண்டு எயில் எய்தாய், நீயே;
நாவில் நடு உரை ஆய் நின்றாய், நீயே; நண்ணி அடி
                      என்மேல் வைத்தாய், நீயே;
தேவர் அறியாத தேவன், நீயே திரு ஐயாறு
                      அகலாத செம்பொன்சோதீ!.