521 | ஆலைப் படு கரும்பின் சாறு போல அண்ணிக்கும் அஞ்சு எழுத்தின் நாமத்தான் காண்; சீலம் உடை அடியார் சிந்தையான் காண்; திரி புரம் மூன்று எரிபடுத்த சிலையினான் காண்; பாலினொடு தயிர் நறு நெய் ஆடினான் காண்; பண்டரங்க வேடன் காண்; பலி தேர்வான் காண்; வேலை விடம் உண்ட மிடற்றினான் காண் விண் இழி தண் வீழிமிழலையானே. |