535 | மாலாலும் அறிவு அரிய வரதர் போலும்; மறவாதார் பிறப்பு அறுக்க வல்லார் போலும்; நால் ஆய மறைக்கு இறைவர் ஆனார் போலும்; நாம எழுத்து அஞ்சு ஆய நம்பர் போலும்; வேல் ஆர் கை வீரியை முன் படைத்தார் போலும்; வியன் வீழிமிழலை அமர் விகிர்தர் போலும்; ஆலாலம் மிடற்று அடக்கி அளித்தார் போலும் அடியேனை ஆள் உடைய அடிகள் தாமே. |