859ஐந்தலைய நாக அணைக் கிடந்த மாலோடு அயன் தேடி
                      நாட(அ)ரிய அம்மான் தன்னை,
பந்து அணவு மெல்விரலாள் பாகத்தானை, பராய்த்துறையும்
                     வெண்காடும் பயின்றான் தன்னை,
பொந்து உடைய வெண்தலையில் பலி கொள்வானை,
             பூவணமும் புறம் பயமும் பொருந்தினானை,
சிந்திய வெந்தீவினைகள் தீர்ப்பான் தன்னை, திரு
                 ஆலம்பொழிலானை, சிந்தி, நெஞ்சே!.