971 | நா ஆர நம்பனையே பாடப் பெற்றோம்; நாண் அற்றார் நள்ளாமே விள்ளப் பெற்றோம்; “ஆவா!” என்று எமை ஆள்வான், அமரர் நாதன், அயனொடு மாற்கு அறிவு அரிய அனல் ஆய் நீண்ட தேவாதி தேவன், சிவன், என் சிந்தை சேர்ந்து இருந்தான்; தென் திசைக்கோன் தானே வந்து, கோ ஆடி, “குற்றேவல் செய்கு” என்றாலும், குணம் ஆகக் கொள்ளோம்; எண் குணத்து உளோமே. |