978தே ஆர்ந்த தேவனை, தேவர் எல்லாம் திருவடி
                 மேல் அலர் இட்டு, தேடி நின்று,
நா ஆர்ந்த மறை பாடி, நட்டம் ஆடி, நான்முகனும்
                      இந்திரனும் மாலும் போற்ற,
கா ஆர்ந்த பொழில்-சோலைக் கானப்பேராய்!
          கழுக்குன்றத்து உச்சியாய்! கடவுளே! நின்
பூ ஆர்ந்த பொன் அடிக்கே போதுகின்றேன்-பூம்
                    புகலூர் மேவிய புண்ணியனே!.