272உன் உருவின் சுவை ஒளி ஊறு ஓசை நாற்றத்து
          உறுப்பினது குறிப்பு ஆகும் ஐவீர்! நுங்கள்
மன் உருவத்து இயற்கைகளால் சுவைப்பீர்க்கு,
    ஐயோ! வையகமே போதாதே, யானேல், வானோர்
பொன் உருவை, தென் ஆரூர் மன்னு குன்றை,
   புவிக்கு எழில் ஆம் சிவக்கொழுந்தை, புகுந்து என் சிந்தை
தன் உருவைத் தந்தவனை, எந்தை தன்னை,
     தலைப்படுவேன்; துலைப் படுப்பான் தருக்கேன்மி(ன்)னே!.