167 | பைந்தளிர்க் கொன்றை அம்தாரார் போலும்; படைக்கணாள் பாகம் உடையார் போலும்; அந்திவாய் வண்ணத்து அழகர் போலும்; அணி நீலகண்டம் உடையார் போலும்; வந்த வரவும் செலவும் ஆகி, மாறாது என் உள்ளத்து இருந்தார் போலும்; எம்தம் இடர் தீர்க்க வல்லார் போலும்-இடைமருது மேவிய ஈசனாரே. |