| 595 | மண், இலங்கு நீர், அனல், கால், வானும், ஆகி மற்று            அவற்றின் குணம் எலாம் ஆய் நின்றாரும்;   பண் இலங்கு பாடலோடு ஆடலாரும்;                பருப்பதமும் பாசூரும் மன்னினாரும்;   கண் இலங்கு நுதலாரும்; கபாலம் ஏந்திக் கடை              தோறும் பலி கொள்ளும் காட்சியாரும்;   விண் இலங்கு வெண் மதியக் கண்ணியாரும்         வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே. |